Wednesday, January 06, 2010

2010 சென்னை புத்தக கண்காட்சி / CCNA


இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள்:

. அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு
௨. "? - நாளையை கேள்விக்குறி ஆக்கும் இன்றைய அரசியல் பற்றி" - ஞாநி - ஞானபாநு
௩. எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் (2005 வரையிலான சிறுகதைகள்) - உயிர்மை பதிப்பகம் 
௪. காடு - ஜெயமோகன் - தமிழினி 
௫. ஏழாம் உலகம் - ஜெயமோகன் - தமிழினி 
. ரப்பர் - ஜெயமோகன் - கவிதா வெளியீடு 
௭. ஓலைச்சுவடி (இந்துமத ஆசார-நம்பிக்கை ரகசியங்கள்) - Dr. வெங்கனூர் பாலகிருஷ்ணன் - ADDONE Publishing  Group 
௮. இது ராஜபாட்டை அல்ல - சிவகுமார் - அல்லயன்ஸ் 
௯. தேசாந்திரி -  எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன் பிரசுரம்
௧௦o௦௦. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா - உயிர்மை பதிப்பகம் 
௧௧. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன் - திருமகள் பதிப்பகம்  
௧௨. ஒரு புளியமரத்தின் கதை - சுந்தர ராமசாமி - காலச்சுவடு பதிப்பகம் 
௧௩. பொய்த் தேவு - க.நா.சுப்ரமண்யம் - காலச்சுவடு பதிப்பகம் 
௧௪. எரியும் பனிக்காடு(Red Tea) - இரா.முருகவேள்(P.H. Daniel) - விடியல் பத்திப்பகம் 
௧௫. மகாபாரத உபகதைகள் - அரவிந்தன் - வானவில் புத்தகாலயம் 
௧௬. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்தியாயன் - தமிழ்ப்புத்தகாலயம் 
௧௭. ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள் - அசோகமித்திரன் சிறுகதைகள் - காலச்சுவடு பதிப்பகம் 
௧௮. அறிந்த ஆலயங்கள் அபூர்வ தகவல்கள் - விகடன் பிரசுரம் 
௧௯. காட்டாறு - ஜே.ஷாஜஹான் - வம்சி புக்ஸ் 

சென்ற வருட கண்காட்சியில் வாங்கியவற்றில் சில புத்தகங்களே இன்னும் தூங்கிக்கொண்டு உள்ளன, அடுத்த வருடத்திருக்குள் அவற்றையும் சேர்த்து படித்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும்.

இவைகளுக்கு முன்பாக படிப்பதற்கு நான் இரண்டு வருடங்களாக வைத்து "முக்கி"க்கொண்டிருக்கும் ஒரு "முக்கிய" புத்தகம் உள்ளது. அது  "Cisco Certified Network Associate - Todd Lammle".

இனிமேலும் Certification எல்லாம் mandatory இல்லை என்று உதார் விட்டுக்கொண்டு பிழைப்பை ஓட்டமுடியாது போல உள்ளது.

2010௦-ஜனவரிக்குள்ளாக CCNA பரீட்சையினை முடிக்க வேண்டுமென்று என்னுடைய அலுவலகத்தில் வாங்கியுள்ள புதிய Cisco Nexus 7010 Switch மீது  சபதம்(?) எடுத்துள்ளேன்.
 
சிவகாமியின் சபதம் நிறைவேறியதா என்று தெரியாது, எப்பாடுபட்டேனும் என்னுடைய சபதத்தை முடிக்க வேண்டும்.

Monday, December 14, 2009

புகைப்படங்கள்








































































































Friday, November 27, 2009

தந்தை மகற்கு ஆற்றும்....

காந்தியை இந்திய தேசத்தின் தந்தையாக மட்டுமே நான் இதுவரை அறிந்து வந்துள்ளேன். அவருக்கும் பிள்ளைகள் உண்டு, ஒன்றல்ல நான்கு என்பதை இதுவரை எங்கும் கேட்டதாகவோ, படித்ததாகவோ நினைவில் இல்லை. ஒரு சராசரி தந்தையாக அவரின் செயல் மற்றும் ஆளுமை ஜெயமோகன் அவர்களின் இந்த இரண்டு கட்டுரைகளால் ஓரளவு அறிந்து கொள்ள முடிகிறது.

http://jeyamohan.in/?p=5013

http://jeyamohan.in/?p=5040

ஆங்காங்கே தமிழின தலைவர் கலைஞரின் பிம்பம் வந்து செல்வதை தவிர்க்க முடியவில்லை.

சற்று பெரிய கட்டுரைகள், குறைந்தது அரைமணி நேரமாவது தேவைப்படும்.

Monday, November 16, 2009

சென்னை - 2

எனக்கு உடம்பெல்லாம் ஒரே புல்லரிப்பா போச்சு.

நேற்று தான் சென்னையில் என்னுடைய பத்து வருடங்கள் பற்றி ஒரு பதிவினை போட்டு வைத்திருந்தேன், இன்று என் அலுவலகத்தில் நடந்ததை என்னால் நம்ப முடியவில்லை.....

இன்றைக்கு அலுவலகத்தில் என்னுடைய அணியில் ஒருவர்(விஜய்) புதியதாக சேர்ந்தார். அவரை எனக்கு அறிமுகபடுத்த HRடீமில் இருந்து அழைத்தார்கள். நானும் சென்றேன். அங்கே இரண்டு புதியவர்களும் HRரும் நின்று கொண்டிருந்தார்கள். புதியவர்களில் ஒருவரை அரைகண்ணால் பார்த்தபடியே HRரிடம் இவர்தானா விஜய் என்று கேட்டேன், அவர்கள் இல்லை மற்றொருவர் என்று கூற நானும் அவரை அழைத்துக்கொண்டு என் இருப்பிடம் வந்துவிட்டேன்.
புதியவருக்கு அலுவலகம் மற்றும் பணிகள் பற்றி விளக்கிக்கொண்டிருந்தேன், சற்று தொலைவில் இருந்து என்மேல் இரண்டு கண்கள் ஊறுவதை உணர்ந்து திரும்பி பார்த்தேன். சில நிமிடங்களுக்கு முன் நான் இவரா விஜய் என்று கேட்ட நபர் என்னையே உற்று நோக்கியபடி நின்று கொண்டிருந்தார். ஒரு ஐந்து வினாடிகள் அவரை உற்று பார்த்தவுடன் என் உடம்பில் ஒரு வினாடி மின்சாரம் பாய்ந்ததை போல இருந்தது. செந்தில் அண்ணன். சென்னையில் கழித்த பத்து வருடங்களில் முதல் மூன்று வருடங்கள் என்னுடைய அறையில் இருந்தவர். இம்மாநகரில் எனக்கு கிடைத்த முதல் சில அறிமுகங்களில் அடங்குபவர்.

எவ்வளவு துன்பங்கள், கடினங்களை எதிர் கொண்டாலும் சிரித்த முகத்துடன் இருப்பவர். பணி நிமித்தமாக பெங்களுருக்கு குடி பெயர்ந்தார், அதன் பிறகு அவருடனான தொடர்பு முற்றிலுமாக அறுபட்டது. பலமுறை நினைத்தும் விடாத முயற்சி இல்லாததால் தொடர்பு கொள்ள முடியாமல் போனது. ஏழு வருடங்கள் ஓடி விட்டன.

அதே புன்சிரிப்பு மாறாமல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்.

"அடுத்த வினாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சர்யங்கள் இந்த உலகில் ஏராளம்" - அன்பே சிவம் படத்தில் வரும் வசனம் இது. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்!!

இன்று அவருடன் சென்று குடித்த தேநீர் வழக்கத்தை விட நன்றாக இருப்பதாகப்பட்டது.

2012 - உலகம் அழியுமா?

2012-ல் உலகம் அழிகிறதோ இல்லையோ, மனித இனம் விரைவில் அழியப்போவது என்னமோ உண்மை.

http://www.gnani.net/index.php?option=com_content&task=view&id=117&Itemid=9

பணம் கொண்டு இயற்கையினை வளைக்க முடியாதென்பதை மானுடன் உணரும் வரை ஒன்றும் செய்ய முடியாது.