ரொம்ப நாளாக F.Mக்கு கால் செய்து மொக்கைப் போட வேண்டும் என்பது ஏழுவின் ஆசை. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய பாலாஜி லைனைப் போட்டு ஏழுவிடம் தந்தான். பாதி மப்பில் இருந்த ஏழு ஆரம்பித்தான்.
ஹலோ சூரியன் F.M
ஒழுங்கா சொல்லுங்க. ஹலோ எஃப்.எம்மா? சூரியன் எஃப்.எம்மா?
சூரியன் F.M தாங்க.
அப்படியா? நான் சூரியன் I.P.S ன்னுல நினைச்சிட்டு இருந்தேன்?
கடிக்காதீங்க சார். அது சூரியன் படத்துல. இது ரேடியோ ஸ்டேஷன் பேரு.
ரேடியோவ எங்க வேணா தூக்கிட்டு போலாமே. அப்புறம் ஏன் ரேடியோ ஸ்டேஷன்னு பேரு வச்சீங்க?
சூப்பர் கேள்விங்க. நான் எங்க எம்.டி கிட்ட கேட்டு சொல்றேன்.
அவங்களே டி போட்டு சொல்றீங்க. மரியாதையே இல்லையா?
வழக்கமா நாங்கதான் கேள்வி கேட்போம். நீங்க ஏன் சார் கேள்வி மேல கேள்வி கேட்கறீங்க?
நீங்கதானே கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்கன்னு சொல்றீங்க.
முடியல சார். உங்க பேரு? எங்க இருந்து கால் பண்றீங்க?
மலை. ஏழுமலை. . ஃபோனுக்கு பக்கத்துல இருந்துதான் கால் பண்றேன்.
ஓக்கே சார். போட்டி விதிமுறையெல்லாம் தெரியும்ன்னு நினைக்கிறேன். முதலில் டூயட் பாட்டு ஒன்னு பாடுங்க.
மெட்டுப் போடு.மெட்டுப் போடு. என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு.
சார். டூயட் படப்பாட்டு இல்ல சார். காதல் பாட்டு பாட சொன்னேன்.
புறாக் கூடு போல முப்பது ரூமு..
ஓகே சார். உங்க வழிக்கே வரேன்.இந்தப் பாட்டை யார் பாடினாங்க?
நான் தாங்க பாடினேன். ஏன். நல்லாயில்லையா?
ஸப்பா. ஏன் சார்? அவர் பாடின இன்னொரு பாட்டு பாடனும். அதுக்கு சொன்னேன். சுரேஷ் பீட்டர் தான் பாடியவர். அவரின் வேற ஒரு பாட்ட பாடுங்க.
சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே.
இல்ல சார். இதுக்கு முன்னாடி கால் பண்ண ஒரு நேயர் அத பாடிட்டாரு.
என்னங்க நீங்க. எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் பாடின பாட்டையே நான் திருப்பி பாடுவேன். அவங்களே ஒன்னும் சொல்ல மாட்டாங்க.
அப்படியில்ல சார்.ஒருத்தர் பாடியத இன்னொருத்தர் பாடக் கூடாது என்பது நம்ம போட்டியோட விதி.
அப்புறம் ஏங்க சுரேஷ் பீட்ட்ர்ஸ் பாடின பாட்ட பாட சொன்னீங்க?
ஓக்கே. சார். மொத ரவுண்டு முடிஞ்சுது,
அது எப்படி உங்களுக்கு தெரியும்?
சார். நான் போட்டில முதல் ரவுண்ட் முடிஞ்சுதுன்னு சொன்னேன். அடுத்த ரவுண்டுக்கு போலாமா?
நான் ரெடி.
உஙக்ளுக்கு ரொம்ப புடிச்ச கிரிக்கெட் ப்ளேயர் யாரு?
மந்திரா
மந்திரா பேடியா?
அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. பார்த்தா பொண்ணு மாதிரிதான் தெரியுது.
சார், இதெல்லாம் ரொம்ப ஓவர். அவங்க கிரிக்கெட் கமெண்ட்டேட்டர். கிரவுண்டல ஆடறதுல யார புடிக்கும்?
கேத்ரினா கைஃப். அவங்க ஐ.பி.எல். ஃபைனல்ஸ்ல கிரவுண்டிலே ஆடினாங்களே. பார்க்கலையா?
சார், ரொம்ப மொக்கை போடறீங்க. பரிசு வேணுமா, வேணாமா?
என்னங்க மிரட்டறீங்க? நீங்க கொடுக்கிற மொக்கைப் பட டிக்கெட்டுக்கு இவ்ளோ நேரம் கால் பண்ணி பேசறேனே. என்னை சொல்லனும்.
ஓக்கே சார் தோனியின் சொந்த ஊர் எது?
அடப்பாவி. ஒரு ஊரையே சொந்தமா விலைக்கு வாங்குற அளவுக்கு சம்பாதிச்சிட்டானா?
பதில் சொல்லுங்க சார். தெரியலன்னா லைன கட் பண்ணுங்க.
ராஞ்சி.(ஆறு சொல்லிக் கொடுக்கிறான்)
யாரு சார் அது பக்கத்துல?
ஆறு.
அதான் உங்களுக்கு பதில் சொல்லித் தந்தாரே அவரு.
அதான் ஆறு.
ஓ.ஆறுதான் அவர் பேரா? நீங்க ஏழுன்னா அவர் உங்க தம்பியா சார்?
ஆமாம். நயந்தாரா எங்க அக்கா. அடுத்த கேள்விய கேளுங்க.
அடுத்த ரவுண்ட் ஜி.கே
B.K தெரியும். அது என்ன G.K.?
சார். ஜெனரல் நாலெட்ஜ்.
அப்படி ஒரு சரக்கா?
டொக்
நண்பனொருவன் மின்னஞ்சலில் அனுப்பியது.
Wednesday, September 09, 2009
ஹலோ சூரியன் F.M
Labels: நகைச்சுவை
Posted by தியாகு at 6:22 PM 0 comments
Tuesday, September 08, 2009
பிழைக்க தெரியாத மனுசன்
" என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன்.
கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?" - திரு.நல்லகண்ணு.
"தமிழக அரசு சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு மனை வீதம் சென்னை சோழங்கநல்லூர் அருகில் அரசு நிர்ணய விலையில் வீடு கட்ட ஒதுக்கி தரவேண்டும்" - வேலூர் M.L.A ஞானசேகரன்.
"ஓ, அதற்கென்ன பேஷா செய்துட்டா போச்சு" - கலைஞர்
Posted by தியாகு at 10:07 AM 0 comments
Friday, August 21, 2009
யோவ், நான் யோக்கியன்யா!!!
10 நாட்களுக்கு முன்பு இந்தியா திரும்பினேன், வாஷிங்டன் D.C'யிலிருந்து லண்டன் வழியாக சென்னை பயணம். D.C'யில் security check'ர்க்காக வரிசையில் காத்திருந்த பொழுது எனக்கு ஐந்து நபர்களுக்கு முன்பாக அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு தமிழர் நின்றுக்கொண்டிருந்தார். அவரருகில் ஒரு வாலிபனும் அவர் இளம் மனைவியும் நின்றுகொண்டு பெரியவருடன் உரையாடிக்கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் மூவரும் என்னருகில் வந்தார்கள், வாலிபன் கேட்டான்:
excuse me
yes
are you going to Chennai?
yes
cool, he is my father
oh..hello sir
hi
he is also going to Chennai, we are not travelling, he is going alone, will you be able to help him during the transit in London and also in flights?
உங்க அப்பாவுக்கு தமிழ் தெரியுமா?
yes, he knows
கவலை வேண்டாம், நான் உதவுகிறேன்
thank you very much.
பாதுகாப்பு சோதனைகள் முடிந்து விமானம் ஏறுவதற்கு முன் இருவரும் பரஸ்பரம் சிறிது நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். எட்டு மணி நேர பயணத்திற்கு பிறகு லண்டன் வந்து சேர்ந்தோம். சென்னை விமானம் அடுத்த நான்கு மணி நேரத்தில். அமெரிக்க கிளம்பும் போதே உடன் பணிபுரியும் நண்பன் சென்னை திரும்பும் பொழுது அயல்நாட்டு சரக்கோடு தான் திரும்ப வேண்டும் என்று கட்டளையிட்டிருந்தான்.
லண்டன் விமான நிலைய Duty free கடையில் அவனுக்கானதை வாங்க வேண்டும் என்பது என்னுடைய திட்டம். எதிர்பாரத விதமாக இந்த பெரியவர் என்னுடன் வந்து ஒட்டிக்கொண்டதால் அவரிடம்(மரியாதை காரணமாக) நான் சரக்கு வாங்க வேண்டும் அதற்கான கடைக்கு செல்ல வேண்டும் என்று சொல்ல தயங்கி ஒரு இடத்தில அவரை அமர செய்து சிறிது நேரத்தில் வந்துவிடுவதாக கூறி சென்றேன். Duty free கடையில் இரண்டு பாட்டில்கள் வாங்கி திரும்பினேன். வந்த என்னிடம் சரக்கு பாட்டில்கள் இருப்பதை கவனித்த பெரியவர் கேட்டார்,
என்ன தம்பி சரக்கு வாங்கவா போயிருந்தீங்க?
(தயங்கியபடி) ஆமாங்க
அடடா, என்கிட்ட ஒரு வார்த்தை சொல்ல்யிருக்ககூடாது, நானும் வந்து இருப்பேன்ல, நானும் உங்களை மாதிரி ஒரு குடிகாரன் தான்
என்னது குடிகாரனா!!!! ஹலோ பெரியவரே, எனக்கு குடிபழக்கம் கிடையாது , நான் யோக்கியன்
யோக்கியனா, யோக்கியனுக்கு சாராய கடையில என்ன வேலை?
இது ஏன் நண்பனுக்காக வாங்கினது
இப்படி தான் பலபேர் சொல்லிக்கிட்டு திரியறானுங்க, எந்த குடிகாரன் தன்னை ஒரு குடிகாரன்னு ஒத்துக்குறான்?
நம்புங்க எனக்கு குடி பழக்கம் கிடையாதுங்க...
சரி சரி வாங்க கடைக்கு போகலாம், எனக்கு சரக்கு வாங்கணும்
ஹலோ சார், நம்புங்க நான் குடிகாரன் இல்லை, சத்தியமா இது என் நண்பனுக்கு தான், ஹலோ சார்....
ஹூம்ம்ம்... எனக்கு செவி சாய்க்காதவராக கடையினை நோக்கி சென்றுக்கொண்டிருந்தார்.
Labels: அன்றாட வாழ்க்கை
Posted by தியாகு at 2:08 AM 2 comments
Tuesday, August 18, 2009
கவிதை - 2
சிலுவையினை கழுவு
ஆணிகளை கூர்படுத்து
முள் கிரீடம் அவசியம்
சாட்டை தயாரா?
இயேசு மீண்டு(ம்) வருகிறார்.
Labels: யாரோ சொன்னது
Posted by தியாகு at 12:33 AM 0 comments
கவிதை - 1
இயேசு நாதர்
சிலுவையில்
போப் ஆண்டவரோ
bullet proof'ல்
Labels: யாரோ சொன்னது
Posted by தியாகு at 12:26 AM 0 comments
