Tuesday, September 08, 2009

பிழைக்க தெரியாத மனுசன்

" என்னுடைய 80-வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு கோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது கட்சி. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்தேன். கோடி ரூபாயை வைத்து நான் என்ன செய்ய? தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டேன்.

கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இருந்தால் அலவன்ஸ் கொடுப்பார்கள். எனக்கு 2,500 ரூபாய் வருகிறது. என் மனைவி அற்புதம் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு ஓய்வூதியமாக 4,500 ரூபாய் வருகிறது. இதுதான் எங்களது வாழ்க்கைச் செலவுக்கான தொகை. அப்பா காலத்து வீடு, ஊரில் இருக்கிறது. ஒரு ஏக்கர் நிலத்தில் கொஞ்சத்தை விற்றது போக பாக்கி மிச்சம் இருக்கிறது. இவை போதும் எனக்கு. இதற்கு மேல் வைத்திருந்து என்ன செய்யப் போகிறேன்?" - திரு.நல்லகண்ணு.


60 வருடங்களுக்கும் மேலாக அரசியலில் இருக்கிறார். மாதம் 3,500 ரூபாய் வாடகையில் தமிழ் நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஜாகை. பிழைக்க தெரியாத மனுசனா இருப்பாரு போல.


கொசுறு :

"தமிழக அரசு சட்டசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா இரண்டு மனை வீதம் சென்னை சோழங்கநல்லூர் அருகில் அரசு நிர்ணய விலையில் வீடு கட்ட ஒதுக்கி தரவேண்டும்" - வேலூர் M.L.A ஞானசேகரன்.

"ஓ, அதற்கென்ன பேஷா செய்துட்டா போச்சு" - கலைஞர்

0 comments: