Saturday, February 12, 2011

உலோகம்

உலோகம் - சமீபத்தில் வாசித்த ஜெயமோகனின் நாவல்.
முதல் பக்கத்திநிலேயே நாவலின் உள்ளே செல்லமுடிந்தது.

"காடு" நாவலினுள் செல்ல எனக்கு 20 பக்கங்கள் தேவைப்பட்டது. என்னால் சுஜாதவினை எந்த மனநிலையிலும் வாசித்துவிடமுடிகிறது ஆனால் ஜெயமோகன், தனி மனநிலை தேவைபடுகிறது. மூன்று வருடங்களாக "கொற்றவை"யினுள் மூன்று வருடங்களாக புகமுடியாமல் உள்ளேன்.

சமீப நாட்களாக நிறைய சிறுகதைகளை அவரது தளத்தில் காண முடிகிறது. நல்ல வாசிப்பனுபவத்தினை தரும்.


Wednesday, January 26, 2011

எந்திரன் பார்த்த கதை

சில மாதங்களுக்கு முன்பு கலைஞர் குல நிறுவனங்களிலிருந்து வெளியிடப்படும் எந்த ஒரு படத்தினையும் என் பணத்தினை செலவு செய்து திரையரங்கிற்கு சென்று பார்பதில்லை என்ற கொள்கையினை எனக்குள் வகுத்துக்கொண்டேன்.

கொள்கைக்கு விடப்பட்ட முதல் சவால் - எந்திரன்.

படம் வெளியாகி ஒரு மாதம் வரை தாக்குபிடித்துவிட்டேன். தங்கமணியின் குடும்பத்தில் அனைவரும் எந்திரனை தரிசித்து பார்த்து ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டிருந்தனர். உறவினர்கள் கூடும் சபையில் பலரும் எந்திரனின் வித்தைகளை சிலாகிக்க அந்த உரையாடல்களில் கலந்துகொள்ள முடியாமல் தங்கமணி தன் தகப்பனாரிடம் மாமனாரிடம் புகார் காண்டம் வாசிக்க, மாமனாரின் வீட்டு முற்றத்தில் நசுங்கிய சொம்பும், நாற்காலியும் கொண்டுவரப்பட்டது .

"கொள்கை" என்ற அகராதியில் இல்லாத வார்த்தைகளை கேட்டு வீடே கொந்தளித்தது. இடது கையினில் டிக்கெட்டினை வைத்தால் மட்டுமே வலது கையிலுள்ள எண்ணை தலையில் தேய்க்கப்படும் என்று முதல் வெடியினை கொளுத்தி தலைதீபாவளி கொண்டாட்டத்தினை தங்கமணி துவங்கிவைத்தாள். பந்தியில் எனக்குமட்டும் சதையில்லாத வெறும் எலும்புகள் வந்து விழுந்தன, மற்றவர்களுக்கு டபுள் ஆம்லெட், எனக்கு மஞ்சள்கரு நீக்கப்பட்ட ஆம்லெட்.

எது நடந்தாலும் கொண்ட கொள்கையினை கைவிடுவதில்லை என்று உறுதிபூண்டேன்.  பல அஸ்திரங்களை தாங்கி நான்  போரிட்டுக்கொண்டிருந்த போது கொள்கையில் சிறு ஓட்டையினை கண்டுபிடித்த மச்சான் - உன் பணத்தினைதானே செலவழிக்கமாட்டாய் - தன் பணத்தினைக்கொண்டு இரண்டு டிக்கெட்டுகளை வாங்கிவந்தான். நான் அபிமன்யுவானேன், சக்ராவியூகத்தில்  வீழ்ந்தேன்.

Friday, October 22, 2010

Your excellency return us to paradise, return us to paradise

Your excellency return us to paradise, return us to paradise

Thursday, May 27, 2010

வாழ்க்கை

ரம்பத்தில் இளைஞனாக இருந்த போது, ஏரோப்ப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலை பேசவும் ஆசைப்பட்டேன். நாளடைவில் இந்த இச்சைகள் படிபடியாக திருத்தப்பட்டு, எளிமைப்படுத்தப்பட்டு, எழுபது வயதில் காலை எழுந்தவுடன் சுகமாக மூத்திரம்  போனாலே சந்தோசப்படுகிறேன், வாழ்க்கை இவ்வகையில் படிப்படியான சமரசங்களால் ஆனது.
- சுஜாதா            

Tuesday, March 02, 2010

சுஜாதா

தற்பொழுது சுஜாதாவின் "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்" (விசா பப்ளிகேஷன்ஸ் வெளியீடு) புத்தகத்தினை படித்து வருகிறேன். 1970களில் தொடங்கி எழுதி வந்திருக்கிறார். இதுவரை படித்ததில் கவர்ந்த சில பகுதிகள் கீழே:

ஆகஸ்ட் 1974 --














டிசம்பர் 1988 --


















படிக்கும்போதே இதழோரம் அரும்பும் புன்னகையினை மறைக்க முடியவில்லை. புன்னகைத்து தலை உயர்த்திப்பார்த்தால் ரெயிலில் குறைந்தது நான்கு கண்கள் என்னை பார்த்துக்கொண்டிருகிறது.