Friday, February 05, 2010

எங்கும், எங்கும், பிளாஸ்டிக் மயம்

    
நேற்று குளித்து முடித்து துண்டினை உலர்த்த மொட்டை மாடி சென்ற பொழுது பார்த்த "பிளாஸ்டிக் முறம்".


வீட்டின் உரிமையாளர் கோதுமையினை அந்த முறத்தில் பரப்பி காய வைத்திருந்தார்.  நேற்றுதான் முதன்முதலாய் நான் பிளாஸ்டிக் முறத்தினை பார்க்க நேர்ந்தது. மூங்கில் கொண்டு முடையபட்டதை போல அச்சு கொண்டு செய்யப்பட்ட ஒன்று.

பார்த்தவுடன் ஆச்சர்யம் மேலோங்காமல் ஒருவித வருத்தமே தோன்றியது. உடன், சமீபத்தில் தீராத பக்கங்களில் படித்த கவிதை ஒன்று கண்முன்னே  நிழலாடியது:


நடைபாதி ஓரங்களில்
பிளாஸ்டிக் மரங்களை பயிரிடுவோம்
பிளாஸ்டிக் கிளைகளில் பிளாஸ்டிக் பறவைகள்
பிளாஸ்டிக் கதிர்களில்
பிளாஸ்டிக் தானியங்களை மகசூல் செய்வோம்
பிளாஸ்டிக் பசுக்களின் பிளாஸ்டிக் மடிகளில்
பிளாஸ்டிக் பாலருந்துவோம். 

அருகே சென்று சில கோதுமை தானியங்களை கையிலெடுத்து உற்று பார்த்தேன், பிளாஸ்டிக் அல்ல நிஜ தானியங்கள்தான்.
 

0 comments: